March 28,
2013 08:39 am
இந்தோனேஷியாவின் டொமோஹோன் நகரிலுள்ள லோக்கோன் எரிமலை
குமுறத் தொடங்கியுள்ளது. அதனால்,எரிமலையை சுற்றியுள்ள மக்கள் வெளியேறும்படி அந்நாட்டின் தேசிய மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை
எச்சரித்துள்ளது
.
ஆயிரத்து 689 மீட்டர்
உயரமுள்ள இந்த எரிமலை கடந்த 2011-ஆம்
ஆண்டு ஜூலை முதல் சாம்பலை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று
பயங்கர சத்தத்துடன் வெடித்து சுமார் 2 ஆயிரம்
மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பை வெளியேற்றியது.
எரிமலை
சீற்றத்தால் சுற்றியுள்ள மூன்று கிராமங்களில் அதன் சாம்பல் படிந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்
படி எச்சரிக்கட்டுள்ளனர். எரிமலையின் நிலையை அதிகாரிகள்
தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அருகிலுள்ள கிராமங்களின் பாதுகாப்பு பற்றி
ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment