சனி 30, மார்ச் 2013
தர்மபுரி மாவட்டத்தில் ஒரேநாளில் 24 போலி
மருத்துவர்கள் கைது செய்யப் பட்ட நிலையில்,மேலும் பல போலி மருத்துவர்கள் தலைமறைவு
ஆகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில்
ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு சுகாதாரத்துறை
அதிகாரிகள் மாவட்டத்தில் முழுவதும் உள்ள போலி மருத்துவர் பட்டியலை காவல் துறையிடம்
ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒரே நாளில் நடத்திய சோதனையில் 3 பெண்கள் உட்பட 24 போலி
மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு வரை படித்து
விட்டு, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில்
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால், மற்ற போலி மருத்துவர்கள் தலைமறைவு
ஆகிவிட்டனர்.
மொத்தம் 40 போலி மருத்துவர்கள் தலைமறைவாக உள்ளதாக
போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார்
தீவிரமாக உள்ளனர்.
.tutyonline thanks
No comments:
Post a Comment