அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

மின் கட்டணம் செலுத்த மறுக்கும் 5 லட்சம் டெல்லி மக்கள் - அர்விந்த் கெஜ்ரிவால்


உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று, 5 லட்சம் டெல்லி மக்கள் உறுதி அளித்துள்ளதாக சமூக ஆர்வலரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரமான அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "உயர்த்தப்பட மின் கட்டணத்துக்கு கண்டனம் தெரிவித்து கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம். எங்களது உண்ணாவிரதத்துக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. எங்களது உண்ணாவிரத மேடைக்கு அன்னா ஹசாரே வந்தது, எங்களது போராட்டத்துக்கு வலிமை சேர்த்துள்ளது.


எங்களது போராட்டத்தால் 5 லட்சம் டெல்லி மக்கள் ,உயர்த்தப்பட்ட மின் கட்டணம், உயர்த்தப்பட்ட தண்ணீர் வரி இவைகளை செலுத்த மாட்டோம் என்று வாக்களித்துள்ளனர். இது எங்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. உடல்நிலை சரியில்லாத காரணத்தை சுட்டி காண்பித்து எங்களது உண்ணாவிரதப்  போராட்டத்தை முடித்துக் கொள்ள  அன்னா ஹசாரே கேட்டுக் கொண்டதால், எங்களது உண்ணாவிரதப்  போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks

No comments:

Post a Comment