[ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 01:05.10 பி.ப GMT ]
பிரெஞ்சு தொழிலதிபருக்குச்
சொந்தமான விமானத்தில் 700 கிலோகிராம் போதைப் பொருள் இருந்ததை டொமினிக் குடியரசு
நாட்டின் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அலைன் அஃப்லிலோ(Alain Afflelou) என்பவர் உலகம் முழுக்க மூக்குக் கண்ணாடி
வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கும் பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார்.
இவருக்குச் சொந்தமான ஃபேல்கன் ஜெட் விமானத்தில் 26 பெட்டிகளில் 680 கிலோ
போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து
கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இது குறித்து விளக்க கேட்டு கடிதம் அனுப்புமாறு இவரது நிறுவனத்திற்கு
சுங்கத் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இவருடைய சட்டதரனி சட்டப்படி வழக்கை சந்திப்போம் என்று ஊடக பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
நான்கு மாதங்களுக்கு முன்னர் அலைன் நியாமற்ற முறையில் பணக்காரர்களின் பணத்தை வரி
என்ற பெயரில் பறிமுதல் செய்வதை நிறுத்தவேண்டும் என்று பிரெஞ்சு அரசுக்கு எதிராக
குரல் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment