4 அடி உயரத்திற்கு மேல் வீட்டிற்குள் புகுந்த கார்: ஓட்டுநர் மரணம்
மார்ச் 2013,
பிரிட்டன் சஃபோல்க்கில்(Suffolk)
லாங் மெடோவாக்(Long Meadow) என்ற இடத்தில் சிவப்பு நிற ஆடி கார் ஒன்று ஒரு
வீட்டிற்குள் நான்கு அடி உயரத்துக்கு மேல் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காரை ஓட்டியர் தலையில் காயம் ஏற்பட்டதால் காருக்குள்ளேயே இறந்து விட்டார். அந்த
வீட்டிற்குள் இருந்த மூன்று பேரும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்திலிருந்து உயிர்
தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அருகில் வசிக்கும் கீத் ஷேல்ஸ்(Keith Shales) கூறுகையில்,
வீட்டிற்குள் கார் புகுந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு உயரத்தில் புகுந்ததை
நான் இதுவரை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சஃபோக் காவல் அதிகாரி
பாப்பேட்டர்சன்(Bob Patterson) தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment