அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 29 March 2013

அமெரிக்கா மீது ஏவப்பட வட கொரிய ராக்கெட்டுகள் தயார் நிலையில்!



on 29 March 2013.
அமெரிக்கா, தென் கொரியா, மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்குவதற்காக ராக்கெட்டுக்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன். நேற்று  வட கொரிய தலைநகரில் ஜனாதிபதி, ராணுவ தளபதிகளுடன்...

நடத்திய அவசர ஆலோசனையை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட கொரிய அரசின் செய்தி ஏஜென்சி KCNA வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நேற்று நள்ளிரவு நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த உத்தரவில் கையெழுத்து போட்டுள்ளார்.

 

அமெரிக்காவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜனாதிபதி நினைக்கிறார். ராக்கெட்டுக்கள் ஏவப் படுவதற்கான தொழில்நுட்ப முன்னேற்பாடுகளை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் அவர்.


அமெரிக்காவின் பகுதிகள், வடகொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், மற்றும் பசுபிக் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது எந்த நிமிடத்திலும் வட கொரிய ராக்கெட்டுகள் ஏவப்படலாம்” என்று கூறப்பட்டுள்ளது
eutamilar thanks

No comments:

Post a Comment