அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 30 March 2013

காமன்வெல்த் மாநாடு குறித்து பிரதமர் முடிவெடுப்பார்: நாராயணசாமி



மார்ச் 30, 2013  
 
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்று பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளியுறவுத் துறையுடன் ஆலோசித்து பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார். காமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதால், முடிவெடுப்பதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்யும் என்றார்.
மத்திய அரசுக்கு சமாஜ்வாதி கட்சியின் ஆதரவு தொடரும் என அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால், மத்திய அரசு சிறுபான்மை அரசு அல்ல என்றும் நாராயணசாமி கூறினார்.

puthiyathalaimurai. thanks

No comments:

Post a Comment