Sunday, 31 March 2013 14:00
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ வெளியிடும் கண்டன அறிக்கை:
இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது
உலகமெங்கும் தனிநாடு கேட்டுப் போராடும் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது ஐ.நா அமைப்பின் நடைமுறைகளில் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் தெற்கு சூடானாகும்.
இனி இலங்கையில் சிங்களவர்களோடு சமஉரிமையோடு வாழ முடியாத நிலையிலே ஈழத் தமிழர்கள் உள்ளனர்.
எனவே இந்த விஷயத்தில் தனது கடமையை இந்திய அரசு தட்டிக்கழிக்கக் கூடாது என் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )
இலங்கையில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமிழக சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது
உலகமெங்கும் தனிநாடு கேட்டுப் போராடும் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது ஐ.நா அமைப்பின் நடைமுறைகளில் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணம் தெற்கு சூடானாகும்.
இனி இலங்கையில் சிங்களவர்களோடு சமஉரிமையோடு வாழ முடியாத நிலையிலே ஈழத் தமிழர்கள் உள்ளனர்.
எனவே இந்த விஷயத்தில் தனது கடமையை இந்திய அரசு தட்டிக்கழிக்கக் கூடாது என் மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )
No comments:
Post a Comment