அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 31 March 2013

ஏர்வாடி அருகே காண்டிராக்டர் கழுத்தை நெரித்து கொலை


ராமநாதபுரம், மார்ச். 31-

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது மேலமடை. இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு. இவரது வயலுக்கு அருகில் வைக்கோல் படப்பு வைத்துள்ளார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் வைக்போல் படப்பு அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு கீழக்கரை டி.எஸ்.பி. சோமசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்த வாலிபரின் கழுத்தில் கயிறு இறுகப்பட்ட நிலையில் இருந்தது.

உடம்பில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மேலமடையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுதாகர் (வயது26) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துவிட்டு திருப்புலாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காண்டிராக்ட் எடுத்து தொழில் நடத்தி வந்தார்.

இன்னும் திருமணம் ஆக வில்லை. தொழில் போட்டி காரணமாக “மர்ம” ஆசாமிகள் அவரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது.

சுதாகரை கொலை செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். காண்டிராக்டர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 maalaimalar thanks

No comments:

Post a Comment