ராமநாதபுரம், மார்ச். 31-
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது மேலமடை. இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு. இவரது வயலுக்கு அருகில் வைக்கோல் படப்பு வைத்துள்ளார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் வைக்போல் படப்பு அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு கீழக்கரை டி.எஸ்.பி. சோமசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்த வாலிபரின் கழுத்தில் கயிறு இறுகப்பட்ட நிலையில் இருந்தது.
உடம்பில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மேலமடையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுதாகர் (வயது26) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துவிட்டு திருப்புலாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காண்டிராக்ட் எடுத்து தொழில் நடத்தி வந்தார்.
இன்னும் திருமணம் ஆக வில்லை. தொழில் போட்டி காரணமாக “மர்ம” ஆசாமிகள் அவரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது.
சுதாகரை கொலை செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். காண்டிராக்டர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது மேலமடை. இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகவேலு. இவரது வயலுக்கு அருகில் வைக்கோல் படப்பு வைத்துள்ளார். இன்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் வைக்போல் படப்பு அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு கீழக்கரை டி.எஸ்.பி. சோமசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்த வாலிபரின் கழுத்தில் கயிறு இறுகப்பட்ட நிலையில் இருந்தது.
உடம்பில் காயங்கள் இருந்தன. போலீஸ் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மேலமடையை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுதாகர் (வயது26) என்பது தெரியவந்தது. இவர் டிப்ளமோ படித்துவிட்டு திருப்புலாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காண்டிராக்ட் எடுத்து தொழில் நடத்தி வந்தார்.
இன்னும் திருமணம் ஆக வில்லை. தொழில் போட்டி காரணமாக “மர்ம” ஆசாமிகள் அவரை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பிணத்தை வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது.
சுதாகரை கொலை செய்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். காண்டிராக்டர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
maalaimalar thanks
No comments:
Post a Comment