மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்
விபசார கும்பலிடம் விற்கப்பட இருந்த 12 வயது சிறுமியை மும்பை பொலிசார்
மீட்டனர்.
மும்பையில் சிறுமியர் விற்பனை நடப்பதாக பெங்களூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம்,
மும்பை பொலிசில் புகார் செய்தது.
மும்பையில் ஏராளமான பயங்கரவாதிகள் மற்றும் ரவுடிகளை சுட்டுக் கொன்று,
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற பொலிஸ் உதவி கொமிஷனர், தயா நாயக்கிடம் அந்த
பெங்களூரு நிறுவனம் உதவி கோரியது.
லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு ஏழு ஆண்டு சிறை தண்டனைக்குப் பின்னர்,
சமீபத்தில் தான் மீண்டும் துணை கொமிஷனராக பொறுப்பேற்ற தயா நாயக், பொலிஸ் அதிகாரிகளை
மாறுவேடத்தில் அனுப்பி சிறுமியர் கடத்தல் கும்பலை பிடிக்க உத்தரவிட்டார்.
அதன் படி மும்பை கோரிகான் பகுதியை சேர்ந்த சமினா என்ற பெண்ணின் 12 வயது தங்கையை
விற்க, சமினாவும் அவளின் கணவனும் முன்வந்தனர். இதற்காக பெண்கள் விற்பனை தரகர்
ஒருவனிடம், 70 ஆயிரம் ரூபாய் விலை பேசப்பட்டது.
இதை அறிந்த பொலிசார், மாறுவேடத்தில் சென்று பணம் கைமாறிய போது தங்கள் வேடத்தை
கலைத்து சிறுமியை விற்க முன் வந்த சமினா, அவளின் கணவன் மற்றும் கூட்டாளிகளை கைது
செய்தனர்.
No comments:
Post a Comment