ஓடும் காரில் 20 வயது இளம்பெண்ணெொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எனுமிடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நேற்று இரவு 20 வயதான இளம்பெண் ஒருவர் பணி
முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது காரில் வந்த
வாலிபர்கள், அந்தப் பெண்ணை கடத்திச் சென்று காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம்
செய்துள்ளனர்.
குறித்த பெண்ணை சுமார் 4 மணி நேரம் நகரை காரில் வைத்து பலாத்காரம் செய்த பின்
அவரைக் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு
செய்து 4 பேரைத் தேடி வருகின்றனர்.
அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு முன்பாகவும், அதற்குப் பின்னரும் அவரது
செல்போனுக்கு வந்த அழைப்புகளில் குறிப்பிட்ட எண்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து
வருகின்றனர்.
குற்றவாளிகள் அந்த பெண்ணுக்கு தெரிந்த நபர்களாக இருக்கலாம் என்றும்
குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கள் கைது
செய்யப்படுவார்கள் என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment