அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 30 April 2013

அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு மூலிகை டீ: மாநகராட்சி நிர்வாகம் பரிசீலனை


சென்னை, மே 1-

சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுவதால், அம்மா உணவகங்கள் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

அம்மா உணவகங்களில் ஊறுகாய் அல்லது துவையல் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று அங்கு வரும் பொதுமக்கள் கருதுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு அம்மா உணவகங்களை மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்க செய்வார்களா? என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், அம்மா உணவகங்களில் மூலிகை டீ விற்பனை செய்வதற்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலனை நடைபெற்றது. இந்த மூலிகை டீ திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1-க்கு மூலிகை டீ விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

maalaimalar thanks

No comments:

Post a Comment