சென்னை, மே 1-
சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுவதால், அம்மா உணவகங்கள் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அம்மா உணவகங்களில் ஊறுகாய் அல்லது துவையல் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று அங்கு வரும் பொதுமக்கள் கருதுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு அம்மா உணவகங்களை மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்க செய்வார்களா? என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அம்மா உணவகங்களில் மூலிகை டீ விற்பனை செய்வதற்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலனை நடைபெற்றது. இந்த மூலிகை டீ திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1-க்கு மூலிகை டீ விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு உணவகம் என 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு மலிவு விலையில் உணவுகள் விற்கப்படுவதால், அம்மா உணவகங்கள் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அம்மா உணவகங்களில் ஊறுகாய் அல்லது துவையல் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று அங்கு வரும் பொதுமக்கள் கருதுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு அம்மா உணவகங்களை மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்க செய்வார்களா? என்று அங்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், அம்மா உணவகங்களில் மூலிகை டீ விற்பனை செய்வதற்கு மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் நேற்று பரிசீலனை நடைபெற்றது. இந்த மூலிகை டீ திட்டம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஒப்புதல் பெறப்பட்டு ரூ.1-க்கு மூலிகை டீ விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
maalaimalar thanks
No comments:
Post a Comment