அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 17 April 2013

20க்கு அரிசி வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


20க்கு அரிசி வழங்கும் திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்


சென்னை: வெளிச் சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் கிலோ அரிசி ரூ.20க்கு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை தொடங்கி வைத்தார்.அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதைத் தொடர்ந்து வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு கிலோ அரிசி ரூ.20க்கு வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.


அதன்படி, சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கிலோ அரிசி ரூ20க்கு வழங்கும் திட்டத்தை ஏழை பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜு, மாதவரம் மூர்த்தி, சென்னை மேயர் சைதை துரைசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சந்திர சேகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சீதாராமன், உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு செயலாளர் நிர்மலா,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் 171 இடங்களில் இன்று முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 143 கூட்டுறவு பண்டக சாலைகள், 22 அமுதம் அங்காடிகள் மற்றும் 6 சிறப்பு அங்காடிகள் என 171 கடைகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் 19 இடங்களில் ரூ.20 அரிசி கிடைக்கும். படிப்படியாக தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது


tamilmurasu thanks

No comments:

Post a Comment