
சென்னையை அடுத்த மீஞ்சூரில் தாய், தந்தையுடன் வசித்து வருபவர் நித்யா(19). இவரது தந்தை ஜெய்சங்கர் சம்பாதிக்கும் அனைத்தையும் குடித்து விடுவார், வீட்டு செலவுக்கு பணம் ஏதும் கொடுப்பதில்லை. இவரது நடவடிக்கையை நித்யாவும் அவரது தாயும் பலமுறை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் தந்தையுடன் அடிக்கடி தகராறு ஏற்ப்பட்டு வந்தது.
இந்நிலையில் நித்யாவை பெண் பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் நேற்று முன் தினம் வந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் அங்கு குடிபோதையில் வந்த ஜெய்சங்கர் இதை பார்த்ததும் கோபமடைந்து மனைவியையும் மகளையும் அடித்துள்ளார். இதனை கண்டித்த மகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மகள் எரிந்த படி துடித்ததைப் பார்த்த ஜெய்சங்கர் அங்கிருந்து தப்பியோடினார்.
உடல் கருகிய நிலையில் நித்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி நித்யா உயிரிழந்தார். அவரது மரண வாக்குமூலத்தில், தந்தை ஜெய்சங்கர் தான் தன்னை தீ வைத்து எரித்தார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்தி வருகின்றனர் காவல்துறையினர். மகளை தந்தையே உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/tamil.webdunia thanks
No comments:
Post a Comment