April 27,
2013 10:06 am
திபெத்தில் இருந்து சீன ராணுவம் வெளியேறக் கோரி சிச்சுவான்
மாகாணம், கிர்தி மொனாஸ்திரி என்ற இடத்தில் மேலும் இரண்டு புத்தத்துறவிகள்
நேற்று தீக்குளித்துள்ளனர்.
திபெத்தில்,
இதுவரை விடுதலை கோரி தீக்குளித்து உயிரிழந்த புத்தத் துறவிகளின் எண்ணிக்கை117ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே,
திபெத் பகுதியில் சீன அரசு கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி
உள்ளது. சீனாவுக்கு எதிரான கருத்துகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளும்
தடை செய்யப்பட்டுள்ளன.
திபெத்தியர்கள் வழிபடும் மதத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த
கெஹூன் ஃசோக்யீ
நிம்யா(Gehun Choekyi Nymia) என்ற
இளம் புத்தத் துறவி, 18 ஆண்டுகளுக்கு முன்னர் தமது 6
வயதில் காணாமல் போனார். அவரது பிறந்த நாளை ஒட்டியே புத்தத் துறவிகள் இருவர் தீக்குளித்ததாக
கூறப்படுகிறது.
கடந்த1950ம் ஆண்டு சீன ராணுவம் திபெத்தை ஆக்கிரமித்தது முதல்
அங்குள்ள பொதுமக்களும்,
புத்தத் துறவிகளும் விடுதலை கோரிப் போராடி
வருகின்றனர். தலாய்
லாமாவை தங்களது மதத் தலைவராக திபெத்தியர்கள் வழிபட்டு வருகின்றனர்.
thamilan. thanks
No comments:
Post a Comment