அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 26 April 2013

கர்ப்பிணியின் உடலில் எயிட்ஸ் கிருமியை செலுத்திய கணவன்

[ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல், 2013, ]
கர்ப்பிணியின் உடலில் எயிட்ஸ்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நித்யாலாலா பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி.

இவரது மனைவி திருப்பதியம்மா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் மற்றும் மாமியார் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பதியம்மா கருவுற்றார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் பொதுல பள்ளி பொலிசில் புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு எனது மாமனார் வெங்கடேஸ்வர ரெட்டி, மாமியார் இந்திராவதி ஆகியோர் கொடுமைபடுத்தினார்கள்.
இந்த நிலையில் நான் கருவுற்றேன். ஸ்கேன் செய்து பார்த்ததில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரியவந்தது. இது மாமியார் மாமனாருக்கு பிடிக்கவில்லை.

அவர்களது உறவுக்கார கம்பவுண்டரை வைத்து எனக்கு ஊசி போட்டனர். சில நாள் கழித்து கட்டாய இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இரத்தத்தை சோதனை செய்த வைத்தியர்கள் எனக்கு எய்ட்ஸ் இருப்பதாக கூறினார்கள். எனது கணவர் வீட்டினர் என்னை விரட்டி விட்டனர்.

என் கணவர் குடும்பத்தினர்தான் ஊசி மூலம் எய்ட்ஸ் கிருமியை என் உடலில் செலுத்தி உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொலிசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான திருப்பதியம்மாவின் கணவர் சீனிவாச ரெட்டி, அவரது மாமனார், மாமியாரை தேடி வருகிறார்கள்.

viyapu. thanks

No comments:

Post a Comment