அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday 27 April 2013

ரேஷன் கடை விற்பனையாளர் 4 பேர் பணியிடை நீக்கம்


By ராமநாதபுரம்

First Published : 27 April 2013 12:18 AM IST
ராமநாதபுரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் ரேஷன் கடைகளில் மாவட்ட இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தலைமையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
   முதுகுளத்தூர் தாலுகாவில் நல்லிருக்கை கிராம ரேஷன் கடையும், விளங்களத்தூர் ரேஷன் கடையும் பணி நேரத்தில் மூடியிருப்பதை அறிந்து விற்பனையாளர்கள் கே.நாகநாதன், என்.காட்டுராஜன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
   கமுதி தாலுகா, கள்ளிக்குளம் கிராம ரேஷன் கடை விற்பனையாளர் சீனிவாசன் கடையில் பாமாயில் 151 கிலோ இருப்பு குறைவாக வைத்திருந்ததால் அவரையும், வல்லக்குளம் ரேஷன் கடையில் கள்ளச்சந்தையில் பாமாயில் விற்பனை செய்தமைக்காக அக் கடையின் விற்பனையாளர் திருமூர்த்தியையும் இணைப் பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 வேலை நேரத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

dinamani. thanks

No comments:

Post a Comment