மது அருந்தும் போட்டியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை விழுங்கிய பெண்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013,
அமெரிக்காவில் வாஷிங்டனிலுள்ள
தம்பா என்ற பெண்கள் சங்கத்தில் நிதி திரட்டுவதற்காக "ஷாம்பெயின்"(திராட்சை ரசம்
மது) அருந்தும் போட்டி நடைபெற்றது.
அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில் ஒன்றில்
மட்டும் ஒரு தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை
போட்டு இருந்தனர்.
அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம்
சொந்தம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் போட்டியில் மிகவும் ஆர்வமுடன்
பெண்கள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, வைரம் போடப்பட்டிருந்த கோப்பை மிரியம் என்ற 80 வயது பெண்ணுக்கு
கிடைத்துள்ளது. அவர் அந்த கோப்பையில் ஊற்றப்பட்டிருந்த மதுவுடன் அதில்
போடப்பட்டிருந்த வைரத்தையும் சேர்த்து தவறுதலாக விழுங்கிவிட்டார்.
அதைப் பார்த்ததும் மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்துள்ளனர். இருந்தும் அதை
கண்டு கொள்ளாத அவர் முடிவில் சுதாரித்து தான் விழுங்கியது வைரம் என்று தெரிந்து
கொண்டார்.
பின்னர் டொக்டரிடம் சென்று "எக்ஸ்ரே" எடுத்து தனது வயிற்றுக்குள் வைரம் இருப்பதை
அறிந்து வெளியே எடுத்துள்ளார். மேலும் நகை கடைக்கு சென்று அதன் தரத்தையும்
பரிசோதித்துள்ளார்.
No comments:
Post a Comment