அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 April 2013

கர்நாடகாவில் பாஜகவின் இருண்ட ஆட்சி : சோனியா காந்தி குற்றச்சாட்டு




கர்நாடகாவில் கடந்த 9 அண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சி இல்லாததால் கர்நாடக பாஜக ஆட்சியில் இருண்டு  கிடக்கிறது என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கர்நாடக சட்ட பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "கர்நாடகாவுக்கு என்று ஒரு காலத்தில் தனி கவுரவம் இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டு கால  பாஜக ஆட்சியில் கர்நாடகாவின் புகழ் அதள   பாதாளத்துக்கு சென்று விட்டது. பாஜக வினர் ஊழல் செய்வதிலும் அரசுக்கு சொந்தமான சொத்துக்களை கொள்ளை  அடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். மக்கள் சேவையில் துளியும் ஈடுபடாமல் ஊழல் ஆட்சி செய்த பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்.

இதை மக்கள் ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு, நடக்க இருக்கும் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சி செய்த பாஜகவினரின் கனிம வள ஊழல், சட்டப்பேரவையில் நீலப்படம் பார்த்தது, அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 9 ஆண்டு காலமாக காங்கிரஸ் ஆட்சி இல்லாமல் கர்நாடகாவே இருண்டு  விட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருக்கும்போது, மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்து இருந்தால், கர்நாடகா  பெரிய அளவில் வளர்ச்சி பெற்று இருக்கும். எனவே காங்கிரஸ் கட்சியை இப்போதாவது வெற்றி பெற செய்ய வேண்டும்." என்று கேட்டு கொண்டார் சோனியா காந்தி.

4tamilmedia thanks

No comments:

Post a Comment