அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 2 April 2013

சென்னை விமானநிலையத்தில் சிக்கிய பயணிகள் வாயில் தங்க பிஸ்கட்!



on 02 April 2013.
கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வாயில் ரூ.13.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து நேற்று இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் ஒன்று வந்தது.

அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு 2 பயணிகள் மீது சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த 2 பேரையும் அழைத்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவற்றை கேட்டதுடன் சில கேள்விகளும் கேட்டனர். அதற்கு அந்த 2 பேரும் எந்த பதிலும் அளிக்காமல் ஒரு துண்டு சீட்டில் நாங்கள் இன்று மவுன விரதம் என்று எழுதி காட்டினர்.


இதையடுத்து போலீசார் அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வாயைத் திறந்தனர். அப்போது ஒருவரின் வாயில் இருந்து 225 கிராம் தங்க பிஸ்கட்டும் மற்றொருவரின் வாயில் இருந்து 200 கிராம் தங்க பிஸ்கட்டும் வந்து விழுந்தன. அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம் ஆகும். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


விசாரணையில் அவர்கள் கண்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது(53) மற்றும் முகமது இஷாத்(47) என்பது தெரிய வந்தது. அவர்கள் யாருக்காக தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தனர் என்பது குறித்து விசராணை நடந்து வருகிறது.

eutamilar thanks

No comments:

Post a Comment