April 30,
2013 03:52 pm
தனது சொந்த தங்கையை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு
உட்படுத்தியதால், அந்த சிறுமி தற்போது கர்பமாகியுள்ள அவலம் இந்தியாவில்
அரங்கேரியுள்ளது.
இந்தியாவின், மும்பை மாநிலம் தானே பகுதியில், தனது
தாய், தந்தை
மற்றும் சகோதரியோடு வசித்து வந்த 19 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன், அவனுடைய
தங்கையை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியுள்ளான்.
தன்னை
துன்புறுத்தும் அண்ணனின் செயலை பெற்றோரிடம் கூறுவதற்கு பயந்த அந்த 14 வயது
சிறுமி, நேற்று
கடும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி
காத்திருந்தது. பரிசோதனையில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும், இந்த
கர்ப்பத்திற்கு அச்சிறுமியின் அண்ணன் காரணம் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் அந்த இளைஞனை கைது
செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
thamilan thanks
No comments:
Post a Comment