அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday 28 April 2013

நடுவீதியில் துப்பாக்கி வெறியாட்டம்!! பொது மக்கள் படுகொலை!



on 28 April 2013.
19 வயதுடைய இளைஞன் மார்செயின் வடபகுதியிலுள்ள Istres (Bouches-du-Rhône) எனும் இடத்தில் நட்ட நடுவீதியில் நின்று AK 47 இனால் பரவலாகச் சுட்டுள்ளான். இதில் மூவர் கொல்லப்பட ஒரு பெண் காயமடைந்துள்ளார். அதன் பிறகு காவற்துறையினர் இவ் இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவமானது வியாழக்கிழமை 14h00 மயியளவில் Berre நீர்க்கரையிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்துள்ளது. இதில் வீட்டு முன்பகுதியில் நின்று வேலை கொண்டிருந்த 35 மற்றும் நாற்பது வயதுடைய இரு ஆண்களை இந்த Istres ஐச் சேர்ந்த 19 வயது இளைஞன் தன் கையிலிருந்த AK47 இனால் சுட்டுக் கொன்றுள்ளான். பின்னர் அங்கு வந்து கொண்டிருந்த மகிழுந்தை நோக்கிச் சுட்டதில் அதனைச் செலுத்திவந்த 55 வயதுடைய பெண்மணி காயமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அருகில் நின்ற மகிழுந்தின் கதவைத் திறந்து அதற்குள் இருந்த ஒரு அறுபதுகளின் வயதுடைய ஒருவர் மீது பல தடவைகள் சுட்டு அவரையும் கொன்றுள்ளான். அதன் பிறகு தனது துப்பாக்கியை புதருக்குள் வீசி எறிந்துள்ளான்.


அயலவர் ஒருவர் கூறுகையில் வேட்டையாடும் ஒருவன் தனது இரைக்காக மான்களைத் தேடி வேட்டையாடும் பாவனையிலேயே ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து அவ் இளைஞன் சுட்டதாகக் கூறியுள்ளார். மேலும் ஒருவர் சாட்சியமளிக்கையில் கொலைகளைச் செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து சென்றதாகவும் கூறியுள்ளார். விசாரணைகளின் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை கொலையாளி தனது AK 47 இனையும் அதற்கான ரவைக்கூடுகளையும் (magazine) இணையத்தளம் மூலமாக வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


«Démilitarisée» எனப்படும் செயற்பாடு நீக்ப்பட்ட AK47 இனை வாங்கி அதனை மீண்டும் செயற்பாட்டுத் திறனுக்குக் கொலையாளி மாற்றியுள்ளான். இணையத்தளத்தின் மூலம் ஆயுதம் வாங்குவது என்பது மிகவும் பாரதூரமான செயல் என்றும் இது மிகவும் அவதானமாகக் கண்காணிக்கப்படவேண்டிய விடயம் என்றும் பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார் மார்செய் காவற்துறையினரால் கடுமையாக விசாரிக்கப்பட்டு வரும் கொலையாளி தான் அந்த வழியில் வந்தவர்களையே சுட்டதாகவும் சுடப்பட்டவர்களிற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சமூக உதவிக் குடியிருப்பில் (HLM) வாழும் இவரின் வீட்டில் கொலையாளியின் தந்தையையும் தாயையும் விசாரித்த காவற்துறையினர் தொடர்ந்து சோதனை நடாத்தியதில் வீட்டிலிருந்து மேலும் ரவைக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவரின் வீட்டிற்கு அருகாமையிலேயே இவர் இக் கொலைகளைச் செய்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டபோது தாம் அல்கைதாவின் கிளை அமைப்பைச் சேர்ந்தவன் என்று கூறியுள்ளார் .


ஆனால் இவர் கூறிய பேரில் கிளை அமைப்புக்கள் எதுவும் இல்லை எனவும் பின்னர், முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறுவதாகவும் காவற்துறையினரினருடன் நெருக்கமான தகவல்மூலம் ஒன்று தெரிவித்துள்ளது விசாரணையின் பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை பரிஸ் 17இலுள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்ட காவற்துறையினர் 24 வயது இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.


இது உள்துறை அமைச்சின் வழிநடத்தலில் நடைபெற்றதால் காவற்துறையினரின் பாதுகாப்பில் மனுவல் வால்ஸ் பெரிதும் அக்கறை செலுத்தியதாகத் தெரிவிக்பட்டுள்ளது. இந்த இளைஞன் தன்னோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்றும் தான் செய்த செயலில் தானும் பங்கெடுக்கப் போவதாக உறுதி அளித்தாகவும் கொலையாளி தெரிவித்ததன் அடிப்படையிலேயே இக்கைது நடைபெற்றுள்ளது. அலட்சியமாக எதனையும் நினைக்காமலேயே இக் கைது நடைபெற்றதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக இணையத்தளம் மூலமும் தொலைபேசி மூலமும் தொடர்புகள் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.


இருவருக்கும் பல விடயங்களிலும் கருத்து ஒற்றுமை இருந்துள்ளது சம்பவம் நடந்து 24 மணிநேரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மற்றும் சனிக்கிழமை காலை, கொலையாளி பற்றிய தகவல்கள் சிறிது சிறிதாக வெளியாகத் தொடங்கி உள்ளது. இவர் தனது முகநூலில் தற்காப்புக் கலை மற்றும் உடற்பயிற்சி, கணினி போன்றவற்றில் ஆர்வமுள்ளவர் என்று தெரித்துள்ளார். தன்னை "Karl Rose" என்றும் அழைத்துள்ளான். துலுசில் இராணுவத்தினரையும் குழந்தைகளையும் கொன்ற ஜிகாத் தீவரவாதியான மொகமட்மேராவிற்கும் தான் ரசிகன் எனவும் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.


கணினியிலும் விளையாட்டுக் கருவிகளிலும் அதிகம் விளையாடும் இவர் முகநூலில் தனது தொழில் "Braqueur de fourgon" (சிறு பார ஊர்திக் (VAN) கொள்ளைக்காரன்) எனப் பதிவு செய்துள்ளார். இவர் இலத்திரனியல் மற்றும் கணினி வலையமைப்பு என்பவற்றில் BAC PRO படித்துள்ளார். பின்னர் வேறு சிறு வேலைகளிற்கான பயிற்சியையும் பெற்றுள்ளார். இவர் சூட்டுப் பயிற்சி பெற்று அனுமதிப் பத்திரம் (Licencié en Tir) வைத்துள்ளார். இவரது பெற்றோர்களின் வீட்டில் திருட்டு நடந்த பின்னர் நடந்த காவற்துறையினரின் சோதனையில் அகப்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளைக் கைப்பற்றியதிலிருந்து இவர் கடந்த ஒரு வருடமாகவே காவற்துறையினரின் கண்ணகாணிப்பில் உள்ளார்.


அதிலிருந்து Istres காவற்துறையினரிடம் 15 நாட்களிற்கு ஒரு முறை சென்று உளவியல் ஆலோசனைகள் பெறும் படி ஆணையிடப்பட்டார். இது வரை விசாரணையில் இக் கொலைகளிற்கான காரணங்கள் எதனையும் கொலையாளி கூறவில்லை எனக் கூறியுள்ள காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

News :Source


eutamilar. thanks

No comments:

Post a Comment