- Friday, 26 April 2013 15:44
சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டில் தங்கம் விலை குறைந்ததால், இறக்குமதி அதிகரித்துள்ளது. பிப்ரவரி வரை ரூபாய் 2.75 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிதி நெருக்கடி காரணமாக தங்கத்தை விற்றன. இதனால் சர்வதேச சந்தையில், தேவைக்கு அதிகமாகவே தங்கம் வரத்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலை கடந்த ஆண்டு செப்டெம்பரில் குறைந்தது. இந்தியாவைப் பொருத்தவரை தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
கடந்த செப்டெம்பரில் தங்கம் விலை குறைந்ததால், செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான களத்தில் தங்கம் இறக்குமதி 38.7 சதவிகிதம் அதிகமானது என்றும், இந்த காலத்தில் மட்டும் ரூபாய் 1.80 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதியாகி உள்ளது என்றும், இந்திய பொருளாதார ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விலை குறைந்ததற்கு ஏற்ப செப்டெம்பர் முதல் பிப்ரவரி வரியிலான காலக்கட்டங்களில் மும்பையிலும் தங்கம் விலை 5.4 சதவிகிதமாக குறைந்தது..
தங்கம் இறக்குமதி அதிகரித்ததால், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்தது. ரூபாய் மதிப்பு சரியும் என்பதால் ஜனவரியில் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்ததை விட 27.9 சதவகிதம் உயர்ந்து.ரூபாய் 29.425 கோடிக்கு இறக்குமதியாகி உள்ளது, என்று புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
கடந்த 2012 செப்டம்பர் முதல் 2013 பிபரவரி வரையான காலத்தில் 12 சதவிகித அளவுக்கு தங்கம் இறக்குமதி உயர்ந்து, மொத்தம் ரூபாய் 2.75 லட்சம் கோடிக்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச்சில் தங்கத்தின் விலை மேலும் சரிந்ததால் இறக்குமதியும் அதிகரித்து இருக்கும் எனவும் தெரிய வருகிறது.
4tamilmedia. thanks
No comments:
Post a Comment