அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

டெல்லியில் கடும் நிலநடுக்கம்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்


புதுடெல்லி, ஏப். 16-

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறி, திறந்தவெளிகளுக்கு வந்தனர். இதேபோல் டெல்லி புறநகர்களான குர்கான், நொய்டா, பஞ்சாப் தலைநகர் சண்டிகர்,ஜெய்பூர் அகமதாபாத் ஆகிய இடங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்களில் திரண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு உருவான இந்த நிலநடுக்கம் காரணமாக, பாகிஸ்தான் மற்றும் ஈரானின் பல பகுதிகளிலும் கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதிக அளவில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.

முன்னதாக இன்று காலையில் அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரு குழந்தை இறந்தது. 2 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

maalaimalar  thanks


 

No comments:

Post a Comment