புதுடில்லி: பாகிஸ்தான், ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம்
ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம்
இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் இன்று மாலை நில நடுக்கம்
ஏற்பட்டது. பல்வேறு மாடிகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில
நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு
மையம் தெரிவிக்கிறது.
இன்று மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள்
மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம்,
கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக
கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில
நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என
அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.
குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது.
ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.