அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 16 April 2013

ஈரான்- பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது



பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2013,

புதுடில்லி: பாகிஸ்தான், ஈரானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம்
இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது. பல்வேறு மாடிகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்தனர். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பும், பதட்டமும் தொற்றிக்கொண்டது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இன்று மாலை 4.15 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பல அடுக்குமாடிகள் குலுங்கியதை பலரும் உணர்ந்ததாக கூறினர். டில்லியை ஒட்டியுள்ள அரியானா, குர்கான், நொய்டா பகுதியிலும் இந்த நில நடுக்கம் இருந்தது. பாகிஸ்தான், ஈரானில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என அஞ்சப்படுகிறது. 8 ரிக்டர் அளவு பதிவானதாக கூறப்படுகிறது.

குஜராத், பஞ்சாப், உத்தரபிரதேசம் மாநிலங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. ஆனால் இதுவரை சேதங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை.


dinamalar. thanks

No comments:

Post a Comment