அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday 29 April 2013

கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை


By ராமநாதபுரம்

First Published : 29 April 2013
ராமநாதபுரம் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

  ராமநாதபுரம் அருகே உள்ள குப்பன்வலசை என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி (36), ராஜா (35). இவர்களுக்கும் 5 பேர் கொண்ட கும்பலுக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு உள்ளது.
  இக்கும்பலைச் சேர்ந்த 2 பேர் முத்துச்சாமி வீட்டிற்கு வந்து பணம் தருவதாக அழைத்துச் சென்றுள்ளனர். அதை நம்பி முத்துச்சாமி, ராஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
  சாத்தான்குளம் குண்டூரணிச் சாலை அருகே வரும்போது 5 பேர் கும்பலில் ஒருவர் மிளகாய்ப் பொடியைத் தூவி முத்துச்சாமி, ராஜா ஆகியோரை கத்தியால் குத்த முயன்றனர்.
  இதில் ராஜா சிறு காயங்களுடன் தப்பி ஓடினார். முத்துச்சாமியை அவர்கள் கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
  இவரது முதல் மனைவி ஆதிலாபானு. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆதிலாபானுவும், இரு குழந்தைகளும் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பாலத்தின் கீழ் சாக்கு மூட்டையில் பிணமாகக் கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  இதைத் தொடர்ந்து முத்துச்சாமி ஒரு மாதத்துக்கு முன்பு சரண்யா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
  இந்த கொலை குறித்து கேணிக்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

dinamani. thanks

No comments:

Post a Comment