ஈராக்கில் தொடர் தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 75 ஆக உயர்வு!
ஈராக்கில் கடந்த 2008-ம் ஆண்டு சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு அவர் தூக்கிலிடப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வாபஸ் பெற்பட்ட 1 1/2 ஆண்டு காலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று தலைநகர் பாக்தாத் மற்றும் அதை சுற்றியுள்ள...
பகுதிகளில் 10 இடங்களில் தொடர் கார் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன. குறிப்பாக 'ஷியா' பிரிவினர் வாழும் பகுதிகளிலும் அவர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. முதலாவதாக மாலை 6 மணிக்கு பாக்தாத்தின் மத்திய சத்ரியா பகுதியில் சக்தி வாய்ந்த 2 கார் குண்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. இது ஷியா பிரிவினர் அதிக அளவில் வாழும் பிரபலமான பகுதியாகும். அதில், 6 பேர் பலியாகினர்.
21 பேர் காயம் அடைந்தனர். அதே போன்று பியா, ஹுரியா, டியாலா பிரிட்ஷ் உள்ளிட்ட 10 இடங்களில் அடுத்தடுத்து கார்குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இப்பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் மொத்தம் 75 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்னர். ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. அல்கொய்தா மற்றும் அதன் தோழமை தீவிரவாத அமைப்புகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
News : Source
eutamilar thanks
No comments:
Post a Comment