அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 28 May 2013

சிறிலங்காவுக்கு எதிராக வலுவான அறிக்கை ஐ.நாவில் சமர்ப்பிப்பு!


on .
சிறிலங்காவில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லா தொழிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர் என, அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுவதாக...

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அந்த அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறிலங்கா தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றினை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத நெருக்கடிமிக்க சூழலே காணப்படுகின்றது. பல்வேறு வகையான மனித இயல்புவாழ்க்கைக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தும் நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெறுகின்றன.
இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அமைதி ஊர்வலங்கள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் நடவடிக்கைகள் முடக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படுகின்றன. பல சந்தர்ப்பங்களில் பொது மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற அமைதி ஊர்வலங்கள் மீது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக, சிறிலங்காவில் இயங்குன்ற பொதுபல சேனா என்ற அமைப்புக்கு எதிராக இடம்பெறும் போராட்டங்களுடன் தொடர்புடையவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறான நெருக்கடி மிக்க சூழல் சிறிலங்காவில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதைவிட மிகவும் மோசமான சூழல் வட மாகாணத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இங்கு அரசியல் கட்சிகள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் முனனெடுக்கின்ற போராட்டங்கள் கலைக்கப்பட்டு, அந்தப் போராட்டங்களுடன் தொடர்புடையவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது. பல சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்படுகின்றனர். அத்துடன், நீதிமன்ற ஆணையுடன் பல அமைதி ஊர்வலங்களுக்குத் தடையும் பிரேரிக்கப்படுகின்றது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

eutamilar thanks

No comments:

Post a Comment