கொல்கத்தா, மே 30-
கொல்கத்தா அருகே வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வங்க கடலில் சென்னைக்கு தென் கிழக்கே சமீபத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வடமேற்கு திசையில் நகரும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மியான்மர் நாட்டில் கரையை கடந்தது.
இந்த நிலையில், வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் சின்னம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் கொல்கத்தாவுக்கு தென் கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இது வங்க கடலின் பெரும்பாலான பகுதி முழுவதும் பரவி உள்ளதால், சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது.
இந்த புயல் சின்னம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேச கடற்கரையில் விரைவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும், வங்காளதேசத்திலும் பலத்த மழை பெய்யும் என்றும் கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது.
கொல்கத்தா அருகே வங்க கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
வங்க கடலில் சென்னைக்கு தென் கிழக்கே சமீபத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது வடமேற்கு திசையில் நகரும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மியான்மர் நாட்டில் கரையை கடந்தது.
இந்த நிலையில், வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயல் சின்னம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் கொல்கத்தாவுக்கு தென் கிழக்கே 130 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இது வங்க கடலின் பெரும்பாலான பகுதி முழுவதும் பரவி உள்ளதால், சென்னையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது.
இந்த புயல் சின்னம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன் ஆகிய துறைமுகங்களில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
இந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்காளதேச கடற்கரையில் விரைவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும், வங்காளதேசத்திலும் பலத்த மழை பெய்யும் என்றும் கொல்கத்தா வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது.
maalaimalar thanks
No comments:
Post a Comment