அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 31 May 2013

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதல் மூன்று இடங்களை பிடித்து மாணவிகள் சாதனை

[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013,
தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லை மாணவிகள், மாநிலத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சோனியா, 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை பாலமுருகன், திசையன்விளையில் சித்தா டாக்டராக உள்ளார். தாய் பபிதா தேவி, நெல்லை மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக டி.வி.,யை ஒதுக்கி வைத்து விட்டு படித்ததும், பள்ளியில் தொடர்ந்து பரீட்சை எழுதியதுமே தனது வெற்றிக்கு காரணம் என்கிறார் சோனியா.
இதே போல், பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி மாணவி, ஷெர்லின் பொன் ஜெபா, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை நெல்லை ஸ்ரீ ஜெயேந்திரர் மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண் 496. இவரது தந்தை சத்தி எல்.ஐ.சி., அதிகாரியாக உள்ளார். தாய் லட்சுமி பிரபா, கருவூல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். சுருதியின் தம்பி ஷ்யாமும் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தார். அவர் 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


newindianews thanks

No comments:

Post a Comment