இலங்கை இராணுவத்திற்கு தமிழகத்தில் இனிமேல் பயிற்சி இல்லை: பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி!
27 May 2013 08:59:04 PM படித்தவர்கள்: 19
இலங்கை இராணுவ வீரர்களுக்கு மத்திய அரசு தமிழ் மண்ணில் பயிற்சி அளிக்காது என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உறுதியளிதிருக்கின்றார். தஞ்சையில் 150 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய ஓடுதளத்தை பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் சந்திப்பின் போதே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் கடல் கொள்ளை களை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் புதிய படைத்தளம் உதவி செய்யும்.
ராணுவத்துறையில் தற்போது மிகவும் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள 48 நாடுகள் நம்முடன் பேசி வருகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment