தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை காலம் நடைபெற்று வருகிறது. அக்னிவெயில் என்கிற கத்திரி வெயில் காலம் முடிவுற்றபோதிலும் அதன் தாக்கம் இன்னும் இருந்து வருகிறது. சில மாவட்டங்களில் நேற்று பகலில் மேகமூட்டமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று மாலை வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் தாம்பரம், மாடம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் எல்லாம் மழைநீர் தேங்கி நின்றது. இன்றைய வானிலை குறித்து சென்னைவானிலை மண்டல இயக்குனர் ரமணன் தெரிவிக்கும்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழைபெய்யும் என்றும் சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும் சென்னையில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்றும் தெரிவித்தார்.
tamilantelevision thanks |
No comments:
Post a Comment