தைபே, ஜூன் 29-
தைவானின் கிழக்குக் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஹுலியன் நகரத்திலிருந்து கிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகரம் தைபேயிலும் உணரப்பட்டது. இந்த அதிர்வுகள் சில நொடிகள் நீடித்தது.
ஆனால் நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. தைவான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 3-ம் தேதி 6.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
maalaimalar thanks
No comments:
Post a Comment