By கீழக்கரை,
First Published : 18 June 2013
மலேசியாவில் கொத்தடிமைகளாக வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை மீட்டுத் தருமாறு ஆட்சியர் நந்தகுமாரிடம் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து ஆட்சியரிடம் உறவினர்கள் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் சக்கரக்கோட்டையைச் சேர்ந்த சீனி ஆசாத் அலி, மஞ்சூரைச் சேர்ந்த ஆனந்தராஜ், ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த பழனிகுமார், எமனேசுவரத்தைச் சேர்ந்த முகம்மது நிஸ்தார், தினைக்குளத்தைச் சேர்ந்த அசாருதீன், பைசான் அலி ஆகியோர் மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களை உணவக உரிமையாளர் ஜகுபர்அலி மகன் ஷெரீப் 15 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார். சரியான உணவு, தூக்கமின்றி வேலை வாங்கி வருகிறார்.
மேலும் உடல்நிலை சரியில்லை என்றாலும், விடுமுறை அளிக்க மறுக்கிறார். சம்பளத்தை முறையாகத் தராமலும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பாமலும் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்கி வருகிறார்.
இவர்கள் உணவகத்தில் இருந்து தப்பித்து கடந்த 11 ஆம் தேதி இந்திய தூதரகத்தில் முறையிட்டுள்ளனர்.
எனவே, 6 இளைஞர்களையும் இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்து எங்களது குடும்பங்களை காப்பாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
news dinamani thanks
No comments:
Post a Comment