அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 1 June 2013

தேவிபட்டிணம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை மாயம்

தேவிபட்டிணம் அருகே காரில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகை மாயம்
ராமநாதபுரம், ஜூன். 1-

பேக்கில் வைத்திருந்த 80 பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தேவிபட்டிணம் சின்னப்பள்ளி வாசல் தெருவை சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவரது மகன் முகமது நவாஸ் (வயது 39). இவர் சென்னை சேத்துப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தேவிபட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முகமது நவாஸ் வந்திருந்தார்.

பின்னர் சென்னை செல்வதற்காக ராமநாதபுரம் ரெயில்வே நிலையத்திற்கு முகமது நவாஸ் காரில் கிளம்பினார். காரின் மேல் பகுதியில் லக்கேஜூகளை வைத்து கட்டியிருந்தார். ரெயில்வே ஸ்டேசன் சென்று பார்த்தபோது காரின் மேல் இருந்த லக்கேஜூகளை காணவில்லை. பேக்கில் வைத்திருந்த 80 பவுன் நகையும் காணாமல் போனது.

இது குறித்து தேவிபட்டிணம் போலீசில் முகமது நவாஸ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

maalaimalar thanks

No comments:

Post a Comment