கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் பரவூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது மகளை, அவரது தந்தை உட்பட 100க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில், ஏற்கனவே மூன்று மூறை தீர்ப்பு வழங்கப்பட்டதில் பலருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை சுதீர், திரைப்படத் துறையினருடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார்.
இந்த வழக்கில் மூன்றாவதாக குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகரன் நாயரிடம் கடன் வாங்கியிருந்தார்.
அப்போது கடனை கேட்டு ராஜசேகரன் மிரட்டும் போது, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து தன் மகளை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று 100க்கும் மேற்பட்டோர் பலாத்காரம் செய்வதற்கு அனுமதித்தும் உள்ளார்.
ஒருகட்டத்தில் வேதனையை பொறுக்க முடியாமல், சிறுமி தன் தந்தை பற்றி புகார் செய்துள்ளார்.
ஆரம்பத்தில் இதற்கு உடந்தையாக இருந்த தாயார், பிறகு பொலிசில் முறையிட்டு உள்ளார்.
சிறுமி தெரிவித்த புகாரின் அடிப்படையில், கொச்சி கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பில் சிறுமியின் தந்தை சுதீருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும், தாயாருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
news newindianews thanks |
No comments:
Post a Comment