அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 25 June 2013

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: டாக்டர் உடல் நசுங்கி பலி

பெரம்பலூர் அருகே லாரி மீது கார் மோதல்: டாக்டர் உடல் நசுங்கி பலி
வேப்பந்தட்டை, ஜூன். 25- 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல்பால்ராஜ் மகன் ராஜபாண்டியன் (வயது 49). டாக்டரான இவர் அதே ஊரில் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார். இவரது மனைவி பால்சந்திரா (43). டாக்டர் ராஜபாண்டியன் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று இரவு தனது மனைவியுடன் காரில் புறப்பட்டார். 


அந்த காரை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த டிரைவர் சிவா என்பவர் ஓட்டிச்சென்றார். இந்தநிலையில் அந்த கார் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. 

அப்போது முன்னால் சென்ற லாரியை டிரைவர் சிவா முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் சிக்கி சிறிது தூரம் வரை இழுத்து சென்றது. 

இதில் காரின் பின்னால் இடதுபுறத்தில் அமர்ந்திருந்த டாக்டர் ராஜபாண்டியன் காருக்கு உள்ளேயே உடல் நசுங்கி பலியானார். அவரது மனைவி பால்சந்திரா, டிரைவர் சிவா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

அந்த வழியாக சென்றவர்கள் விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


maalaimalar thanks

No comments:

Post a Comment