மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
[ சனிக்கிழமை, 29 யூன் 2013
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அனுமதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலையை அண்மித்த பகுதிகளில் அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நெல்சன் மண்டேலாவை பார்வையிட வரக்கூடும் என்ற நோக்கில் இந்த ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் தென்னாபிரிக்க கம்யூனிசக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் வெளியுறவுத்துறை கொள்கையானது, சுயநலமானதும் ஒடுக்குமுறைகள் நிறைந்ததாக உள்ளதென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த விஜயமானது , ஏமாற்றமளித்துள்ளதெனவும் தமது தலைவர் மண்டேலாவிற்கும் பராக் ஒபாமாவின் விஜயமானது ஏமாற்றத்தையே அளிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி, நெல்சன் மண்டேலாவை பார்வையிட்டு அவர்களின் குடும்பத்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அவரை பார்வையிட்டு புகைப்படங்கள் எடுப்பதற்கும் இது தருணமில்லை எனவும் அமெரிக்க ஜனாபதி பராக் ஒபாமா நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment