அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 28 June 2013

கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்தன



Saturday, June 29th, 2013
கேரளாவில் கனமழை: 1,829 வீடுகள் இடிந்தன
கேரளாவின் முண்டேரிக்கு அருகில் உள்ள கானாச்சேரியில் ஒரு சுவர் இடிந்து விழுந்ததால் சேதமடைந்த ஒரு வீடு. படம்: தகவல் சாதனம்
திரு­வ­னந்த­பு­ரம்: கேர­ளா­வில் தென்­மேற்­குப் பரு­வ­மழை இந்த ஆண்டு கடந்த 1ம் தேதி தொடங்­கி­யது. இந்த மழை 27 நாட்­க­ளாக பெய்து வரு­கிறது. வழக்­கத்தை விட மழையின் தாக்கம் இந்த ஆண்டு அதி­க­மாக இருப்ப­தால் பல இடங்களில் வெள்­ளச்­சே­தம் ஏற்­பட்­டுள்ளது. ஏரா­ள­மான வீடுகள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்­கு­வ­ரத்­தும் கடுமை­யாக பாதிக்­கப்­பட்­டது.
நேற்று முன்­தி­னம் வரை கேரளா முழு­வ­தும் 93 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. வழக்­க­மாக தென்­மேற்­குப் பரு­வ­மழை காலத்­தில் சரா­ச­ரி­யாக 51 செ.மீ. மழை தான் பதி­வா­கும். ஆனால் இந்த ஆண்டு கூடு­த­லாக 42 செ.மீ. மழை பெய்­துள்­ளது. 22 ஆண்­டு­களுக்­குப் பிறகு கேரளாவில் தற்­போ­து­தான் இந்த அள­வுக்­குக் கனமழை பெய்­துள்­ளது. இதற்கு முன்பு கடந்த 1991ம் ஆண்டு கேர­ளா­வில் இதேபோல கனமழை கொட்­டி­யது. தற்போது பெய்து வரும் பரு­வ­மழை­யின் வேகம் இன்னும் இரண்டு நாட்­களில் குறையும் என்று திரு­வ­னந்த­பு­ரம் வானிலை ஆய்வு மையம் அறி­வித்­துள்­ளது. இதுவரை பெய்த மழையில் கேரளா முழு­வ­தும் 1,829 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன.


tamilmurasu thanks

No comments:

Post a Comment