வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்துகணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே பிரதமராகும் தகுதி அதிகம் உள்ளது என்று கூறியுள்ளனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் டாக்டர் மொய்தீன் பிச்சை என்பவர், ஜெயலலிதா, நரேந்திர மோடி, ராகுல்காந்தி இவர்களில் பிரதமராகும் தகுதி யாருக்கு அதிகம் உள்ளது என்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளார். கருத்து கணிப்பு முடிவுகளை நேற்று இரவு சென்னையில் வெளியிட்டார்.
அதில், சவூதி அரேபியா, கத்தார், அரபு நாடுகள், ஏமன், பக்ரைன், ஆஸ்திரேலியா, குவைத் சிங்கப்பூர், மலேசியா இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் இ மெயில் மற்றும் போன் மூலம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 500 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் 75 சதவிகிதம் பேர் ஜெயலலிதாவுக்குத்தான் பிரதமராகும் தகுதி அதிகம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 2 வது இடத்தில் மோடியும் 3வதுஇடத்தில் ராகுலும் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4tamilmedia thanks
No comments:
Post a Comment