Saturday, June 29th, 2013
இது தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அவர் வழங்கிய நேர்காணல் நேற்று ஒளிபரப்பானது. சில நாட்களாகப் புகைமூட் டம் தணிந்துள்ளபோதிலும் மலேசியா மற்றும் இந்தோனீசியாவின் சில பகுதிகளில் நெருக்கடி நீடிக்கின்றன. அத்துடன் காற்று திசை மாறி வீசும்போது நாம் மீண்டும் பாதிப்புக்குள்ளாவோம் என்றார் அவர்.
புகைமூட்டம் தொடர்பாக இந்த வாரத்தில் அரசியல் முதிர்ச்சிக்குரிய வகையில் இந்தோனீசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதயோ னோவின் மன்னிப்பு அறிக்கை இவ்விஷயத்தில் மிகவும் உதவக் கூடும் என்றார் திரு சண்முகம். டாக்டர் யுதயோனோவின் அறிக்கை அவரது அதிகாரி களுக்குத் தெளிவான விளக் கத்தைக் கொடுத்ததோடு தீயைச் சமாளிக்கும் வளங்களில் கணிச மான அதிகரிப்பையும் அது உணர்த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சிங்கப்பூரும் மலேசியாவும் கூட உதவிக்குத் தயார் என்று அறிவித்துள்ளதாகக் கூறினார்.
tamilmurasu. thanks
No comments:
Post a Comment