வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட குழந்தை பெற்றோரை தேடும் பரிதாபம்(வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013,
உத்தர்கண்டில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த 3 வயது குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
மீட்புக் குழுவினரால் நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்ட 3 வயது குழந்தையின் இரண்டு கால்களுமே முறிந்த நிலையில் இருந்தது. மருத்துவமனையில் கால்களுக்கு கட்டுப்போட்டு சிகிச்சை அளித்ததை அடுத்து, மயக்க நிலையில் இருந்து தற்போது தெளிந்துள்ளது அந்தக் குழந்தை. மயக்கம் தெளிந்ததிலிருந்து தனது பெற்றோரை தேடி அழுது கொண்டே இருக்கும் குழந்தையை மருத்துவமனை ஊழியர்களும், அருகில் இருப்பவர்களும் சமாதானம் செய்தாலும் அவை பலனளிக்கவில்லை அவளது பெற்றோர் வெள்ளத்தில் சிக்கி இறந்துவிட்டனரா அல்லது வேறு எங்கேனும் சென்றுவிட்டனரா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
No comments:
Post a Comment