அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 27 June 2013

நிவாரணம் கேட்ட விவசாயியை சாகச் சொன்ன கலெக்டரால் பரபரப்பு

[ வெள்ளிக்கிழமை, 28 யூன் 2013, 
நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் சாவதை தவிர வேறு வழியில்லை என்று முறையிட்ட விவசாயி ஒருவரை, உனது விருப்பப்படி செத்து போ என்று கூறிய கலெக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் குதெரா பகுதியை சேர்ந்த விவசாயி ராமேஷ்வர் பன்ஜாரி.
தனது நிலத்திற்கு அருகே சாய ஆலை இருப்பதால் விவசாயம் பண்ண முடியவில்லை என்றும், அதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரியும் மனு அளித்துள்ளார்.
மேலும் கலெக்டரிடம் முறையிட்ட அவர், நிவாரணம் கிடைக்கா விட்டால் தான் இறப்பதை தவிர வேறு வழியில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த அகர்வால், நீங்கள் விரும்பினால் போய் சாகுங்கள், அதற்கு எங்களிடம் அனுமதி பெற அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
கலெக்டரின் இந்த பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சிறிது நேரத்திற்கு பின் தவறை உணர்ந்த கலெக்டர், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் அந்த விவசாயிக்கு செய்வதாக உறுதி அளித்ததுடன், இந்த பிரச்னைக்கான நிலையை கண்டறிய ஏற்கனவே தாங்கள் ஒரு குழுவை அந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


newindianews thanks

No comments:

Post a Comment