அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Saturday, 1 June 2013

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி புயல் : ஐவர் பலி

அமெரிக்காவில் மீண்டும் சூறாவளி புயல் : ஐவர் பலி
June 1, 2013  01:53 pm
அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒக்லஹோமா நகரை சூறாவளி புயல் தாக்கியது. இதில் 24 பேர் பலியாகினர். இதில் இருந்து மீள்வதற்குள் ஒக்லஹோமா நகரை நேற்று மீண்டும் சூறாவளி புயல் தாக்கியது.

இதனால் ஒக்லஹோமா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. புறநகர் பகுதியான கேசினோவில் வீட்டு கூரைகள் காற்றில் பறந்தன.

தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் இருளில் தவித்தனர். சூறாவளி புயலுடன் பலத்த மழையும் கொட்டியது.

இதனால் சாலைகளில் சுமார் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒக்லஹோமா நகரில் வீசும் சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒரு தாயும்ஒரு குழந்தையும் அடங்குவர்.

thamilan thanks

No comments:

Post a Comment