புதுவலசையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்(NWF) சார்பாக சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. NWF என்ற பெண்கள் அமைப்பு சர்பாக பெண்களுக்கான மாதாந்திர சிறப்பு இஸ்லாமிய பயான் நிகழ்ச்சி புதுவலசையில் சென்ற 25.06.2013 செவ்வாய்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் கிழக்குத்தெருவில் நடைபெற்றது.
சகோதரி.ஜாஹிரா பானு ஆலிமா அவர்கள் வரக்கூடிய ''ரமலானை சிறப்பான முறையில் எதிர் கொள்வது எப்படி?'' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.அதில் ரமலானில் செய்யும் அமல்களுக்காக அல்லாஹ் அளிக்கக்கூடிய கணக்கில்லாத வெகுமதிகளையும் பட்டியலிட்டார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
/puduvalasai.tk/ thanks
No comments:
Post a Comment