அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday 28 June 2013

ஜுலையில் ஆசியான் கூட்டம்



Friday, June 28th, 2013
ஜுலையில் ஆசியான் கூட்டம்
மலேசிய சுற்றுப்புற அமைச்சர் ஜி. பழனிவேல் (வலது) இந்தோனீசிய சுற்றுப்புற அமைச்சர் பல்தஸர் கம்புவாயாவை நேற்று ஜகார்த்தாவில் சந்தித்தார். படம்: ஏஎப்பி
ஜகார்த்தா: புகைமூட்டம் தொடர்பான ஆசியான் நாடுகள் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த இந்தோனீசியா ஒப்புதல் தெரி வித்துள்ளது. 5 நாடுகளுக் கிடையே வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த ஆசியான் கூட்டம், புகைமூட்டப் பிரச்சி னைகளை பற்றி விவாதிப் பதற்காக ஜுலை மாத மத்தியில் முன்கூட்டியே நடத்தப்படும் என்று இந்தோனீசியாவின் சுற்றுப்புற அமைச்சர் பல்தஸர் கம்புவாயா நேற்று தெரிவித்தார்.
மலேசிய சுற்றுப்புற அமைச்சர் ஜி. பழனிவேலைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பல்தஸர் இவ்வாறு தெரிவித்தார். இரண்டு நாள் அதிகாரிகள் கூட்டத்திற்குப் பிறகு மலேசி யாவின் கோலாலம்பூரில் ஜுலை 17ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும். ஆசியான் கூட்டத்தில் சிங்கப்பூர், புருணை, தாய்லாந்து ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும்.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சுமத்ரா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைப்பதற்காக கூறும் வழி முறைகளைக் கேட்க இந்தோ னீசியா தயாராக உள்ளது என்றார் டாக்டர் பல்தஸர். “இந்தோனீசியா ஒப்புதல் தெரிவித்தால், தீயணைப்பு வீரர்களை ரியாவ் மாநிலத்திற்கு அனுப்பத் தயாராக உள்ளோம்,” என்றார் திரு பழனிவேல்.

tamilmurasu thanks

No comments:

Post a Comment