அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 19 July 2013

ஏர்வாடியில் ரூ.1½ கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

ஏர்வாடியில் ரூ.1½ கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
ராமநாதபுரம், ஜூலை. 19–
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் போதைப்பொருள் வைத்திருப்பதாக ‘கியூ’ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு அறை எடுத்து தங்கியிருந்த 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
ஹெராயின் வகையிலான அந்த போதைப்பொருள் சுமார் 1 கிலோ அளவில் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1½ கோடியாகும். இதனை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தில் யார்? யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

maalaimalar thanks

No comments:

Post a Comment