
July 5, 2013 11:26 am
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, கொடூரமாக பாலியல் உறவு கொண்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குஜன்வாலா மாவட்டம் கிலா டேடார் சிங் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது,மின்சாரம் தாக்கி இறந்தார். இறுதி மரியாதைக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலையில் அந்த மாணவியை புதைத்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்காக அவரது உறவினர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு அலங்கோலமாகக் கிடந்த மாணவியின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
புதைக்கப்பட்டிருந்த அந்த மாணவியின் சடலத்தை யாரோ மர்ம ஆசாமிகள் தோண்டி எடுத்து உடலுறவு கொண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களை சமாதானம் செய்தனர். மேலும்,குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று உறுதி அளித்தபிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லறைத் தோட்டத்தின் வெட்டியானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
thamilan thanks
No comments:
Post a Comment