கோலாலம்பூர், ஜூலை 25-
ரமலான் ‘பக்குத்தே’ வாழ்த்து, ஆபாசப் படங்கள் என்று ‘ஆல்விவி’ வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய படங்களை வெளியிட்ட ஆல்வின் டான் (வயது 25) மற்றும் விவியான் லீ (வயது 24) ஆகிய இருவருக்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரிம. 10,000 ஜாமீன் என கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமதிமன்றம் நிர்ணயம் செய்தது.மேலும், நீதிபதி அஸ்மான் ஹீசின் அவர்களுக்கு ஜாமீனை வழங்குகையில் மூன்று நிபந்தனைகளையும் முன் வைத்தார்.
முதல் நிபந்தனையாக அவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க செய்வதும், இரண்டாவது சமய, இன உணர்வு பிரச்சனைகளைத் தூண்டக் கூடிய விஷயங்களை அவர்கள் இணையத்தில் சேர்க்கக் கூடாது எனவும், தொடர்ந்து ஒவ்வொரு மாதம் முதல் தேதியில் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதே அவர் விதித்த நிபந்தனைகளாகும்.
vmpru13 thanks
No comments:
Post a Comment