அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday 25 July 2013

தேசிய முன்னணியின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது


:  
தேசிய முன்னணியின் வெற்றி மீண்டும் நிரூபிக்கப்பட்டது
புத்ரா ஜெயா, ஜூலை 25-
நேற்று நடத்தப்பட்ட திரங்கானு கோலா பி சூட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் தெங்கு ஸைஹான் செ கு அப்துல் ரஹ்மான் 2592 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி வாகைச் சூடினார்.

கடந்த 12 நாள்களாக நடைபெற்ற இத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் நடந்த வாக்களிப்பில் தேசிய முன்னணி  வேட்பாளர் தெங்கு ஸைஹான் 8,288 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் அஸ்லான் யுசுப் 5696 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.
இதனை குறித்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ராசாக் பேசுகையில் இவ்வெற்றின் மூலம் அம்னோவின் வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அம்னோவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதனால் மக்கள் அம்னோ மீது கொண்ட நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தேசிய முன்னணி வெற்றிக்கு ஆதரவு வழங்கி வாக்களித்தவர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

vmpru13 thanks

No comments:

Post a Comment