:
புத்ரா ஜெயா, ஜூலை 25-
நேற்று நடத்தப்பட்ட திரங்கானு கோலா பி சூட் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வேட்பாளர் தெங்கு ஸைஹான் செ கு அப்துல் ரஹ்மான் 2592 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி வாகைச் சூடினார்.
கடந்த 12 நாள்களாக நடைபெற்ற இத்தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் நடந்த வாக்களிப்பில் தேசிய முன்னணி வேட்பாளர் தெங்கு ஸைஹான் 8,288 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் அஸ்லான் யுசுப் 5696 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.
இதனை குறித்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ராசாக் பேசுகையில் இவ்வெற்றின் மூலம் அம்னோவின் வெற்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அம்னோவை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதனால் மக்கள் அம்னோ மீது கொண்ட நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, தேசிய முன்னணி வெற்றிக்கு ஆதரவு வழங்கி வாக்களித்தவர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
vmpru13 thanks
No comments:
Post a Comment